districts

img

காலமானார்

சென்னை, செப்.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியத்தின் தாயார் கவுரிபாய் செவ்வாயன்று (செப்.3) காலமானார். அவருக்கு வயது 88. கோல்ட் ஸ்டோன் இன் அப்பார்ட்மெண்ட், செல்லியம்மன்  கோவில் தெரு, செல்லியம்மன் நகர், அத்திப்பேட், அம்பத்தூர், சென்னை - 58 என்ற முகவரியில் வைக்கப் பட்டுள்ள உடலுக்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, இ.சர்வேசன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, நிர்வாகிகள், பி.சுந்தரம், எம்.பழனி, ஆர்.கபாலி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கவுரிபாயின் இறுதி ஊர்வலம் புதனன்று (செப்.4) காலை 9 மணியளவில்  இல்லத்திலிருந்து புறப்பட்டு டன்லப்  இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும்.