சென்னை ராயபுரத்தில் மக்கள் சங்கமம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட தலைவர் த.ரம்யா சுகுமார் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைவரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திலகவதி, பாவலர் மு. இராமச்சந்திரன் (தமிழ்த் தன்னுரிமை இயக்கம்), பிரவீன்குமார் (கடல்சார் மக்கள் நல சங்கமம்), கடலார் , ஆ. இருளப்பன், சூசை மோகன், ராஜலட்சுமி, சங்கீதா ஆகியோர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.