districts

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீண்டும் ஒரு சாதி ஆணவ படுகொலை..?

ராணிப்பேட்டை, நவ. 6- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் பெயர்பி.ராஜ்குமார். செவ்வாயன்று (நவ.5) இரவு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் பூங்கொடியை அவரது  கண வர் ராஜ்குமார், மகன்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகியோர் காரில் அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.  செல்லும் வழியில் பெரியார் நகர் அருகில், எதிரில் அதீத வேகத்தோடு, தவறான பாதையில் வந்த வாகனம், இவர்கள் பயணம் செய்த கார் மீது மோதியதில் நிலை தடுமாறினர்.  காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்க்கும் போது, எதிரில் வந்த வாகனத்தை ஓட்டி வந்தவரும், அவருடன் வந்தவர்களும் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியவர்களை தடுத்து,  படுகேவலமான ஆபாச வார்த்தைகளில் திட்டிய படி, எந்த ஊர் என்று விசாரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜ்குமார், “தம்பி நாங்க பக்கத்தில் இருக்கும் பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவங்க, வயசுக்காவது மரியாதை கொடுத்து பேசுங்க” என கூறியபோது, சாதி ஆதிக்க வெறியில் இருந்தவர்களால் சகித்துக் கொள்ள முடியாமல்  ராஜ்குமாரை கடுமையாக தாக்கி யுள்ளனர். அருகில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு மக்களை திரட்டி கும்பல் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்த மோதலில் தாக்கப்பட்ட ராஜ்குமார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரண மடைந்து விட்டார். ராஜ்குமாரின் இளைய மகன் செல்லமணி கை எலும்புமுறிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனைத் தொடர்ந்து பாரஞ்சி கிராம மக்கள், தங்கள் கிராமத்தினர் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத தாக்கு தலுக்கும், ஒருவரை அடித்துக் கொன்று விட்ட கொடூரத்துக்கும் நீதியும், நியாயமும் வழங்கவும், குற்ற வாளிகளை கைது செய்யவும் வலி யுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக நேரடியாக தலையிட்டு, சாதி ஆதிக்க வெறியை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதுடன், காரண மானவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கையினை உறுதியாக மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். சாதி ஆதிக்க சக்திகள் நடத்திய தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.