தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையிலான பிரச்சார குழுவுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலூருக்கு வருகை தந்த மற்றொரு குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டனர்.