தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து ஊழியர்கள் சந்திப்பு கோரிக்கை பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில துணை பொதுச் செயலாளர்கள் தே.வாசுகி, மங்களபாண்டியன், மாவட்டச் செயலாளர் நடராஜன், வட்ட செயலாளர் திம்மராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.