மதுராந்தகம், பிப்.10 - சுற்றுச் சூழலை பாதிக்கும் விதமாக விவசாய நிலத்தில் கல்குவாரி சுரங் கம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நட்டதிய மார்க்சிஸ்ட் கட்சியின் தலை வர்கள், பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டத் திற்குட்பட்டது கீழ்வசலை கிராமம். இந்த கிராமத்தின் புல எண்: 121/3ல் 5.79 ஏக்கர் விவசாய நிலத்தில், மண்ணை வாரி கருங்கல் உடைக்க தனி நபர் ஒரு வருக்கு உரிமம் வழங்கியி ருப்பதாக கூறி சுரங்கம் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியால் விவசா யம், குடிதண்ணீர் தட்டுப்பாடு சுற்றுச் சூழல் பாதிக்கும் என்ப தால் மாவட்ட அதிகாரிகள் வரைக்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனா லும் சுரங்கம் வெட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகி றது. இதனால், கோபம டைந்த அந்த கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் வியாழனன்று (பிப்.10) கல்குவாரி சுரங்கம் அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.வாசுதேவன், க.புருசோத்தமன், மது ராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, விசிக ஒன்றிய கவுன்சிலர் அன்புச் செல்வன் உள்ளிட்ட 17பேரை காவல் கைது செய்தனர்.