சென்னை,ஜூன் 18-
தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து 14-ந்தேதி நள்ளிரவு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்நிலையில் ஞாயி றன்று (ஜூன்18) அதிகாலை முதலே காசிமேட்டில் ஏராள மான மீன்பிரியர்கள் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் கூட்டம் அலை மோதியது. ஆனால் குறைந்த அள விலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிப்பார்கள். எனவே அடுத்த வாரத்தில் பெரும்பாலாள விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பு வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வஞ்சிரம் கிலோ ரூ. 950-க்கும், சங்கரா ரூ.700, இறால் ரூ.600, வவ்வால் மீன் ரூ.300 முதல் ரூ.600 வரை, கடமான் ரூ.600, பாறை ரூ.350-, நெத்திலி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.