சென்னை,பிப்.27- சென்னையிலுள்ள 3 பேருந்து பணி மனைகளை பொதுமக்கள் - தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் வணிக வளாகமாக மாற்ற மாந கர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.1543 கோடி செலவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள் ளது. சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து பணிமனைகள் உள்ளன. இவற்றிலிருந்து தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளுக்கு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இவற்றில் 3 பணிமனைகளை மேம்படுத்த மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி திருவான்மியூரில் ரூ.446 கோடியிலும், வடபழனியில் ரூ.610 கோடியிலும், வியாசர்பாடியில் ரூ.485 கோடியிலும் நவீன மயமாக்கப் படள்ளது. குறிப்பாக, பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிகவளாகமாக மாற்றப்படவுள்ளது.