சென்னை, மார்ச் 16 - பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஆகஸ்ட் 15ஆம் தேதி பயன்பாட் டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் முனைவர் வி.கே.சஞ்ஜீவி தெரி வித்துள்ளர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் சென்னை தொலைபேசி மாநில 8ஆவது மாநாடு செவ்வாயன்று (மார்ச் 15) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வி.கே.சஞ்ஜீவி பேசியதன் சுருக்கம் வருமாறு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டாய விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) திட்டத்திற்கு பிறகும் நிதிநிலை சீரடையவில்லை. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை கூட முறையாக செலுத்த முடியவில்லை. இதனால் பயன்பா டற்ற வளங்களை விற்று நிதிதிரட்டி வருகிறோம். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டு வருகிறது. தொலைபேசி இணைப்புகளை மாதந்தோறும் 4-5 விழுக்காடு அளவிற்கு திரும்ப ஒப்படைத்து (சரண்டர்) செய்து வருகின்றனர். எனவே, தொலைபேசி இணைப்பு புகார்களை விரைந்து தீர்க்க வேண்டும். பணிகள் சிலவற்றை தனியாரிடம் அவுட்சோர்சிங் கொடுத்திருந்தாலும், அவற்றை ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். இந்த தொலைபேசி திரும்ப ஒப்படைப்பதை ஈடுபட்ட, பைபர் ஆப்டிக் கேபிள் சேவையை அதிகரிக்க ஊழியர்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் தொ டர்ந்து அரசு திட்டங்களை எடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்தமா னுக்கு கடல் வழி கேபிள் அமைக்கும் 1000 கோடி ரூபாய் பணியை பிஎஸ்என்எல் எடுத்து செய்தது. இதனால் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்தது. இதேபோன்று ஒரு லட்சத்தீவிற்கு கேபிள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதிலும் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் இல்லை. ஆனால் தனியார் 5ஜி சேவை தொடங்கும் பணி களை செய்து வருகின்றனர். 4ஜி உரிமம் கிடைத்தாலும் அவற்றை செயல்படுத்த காலதாமதம் ஏற்பட்டுள் ளது. அநேகமாக ஆக.15 அன்று 4ஜி சேவை தொடங்கும் என்று எதிர்ப் பார்க்கிறோம். எனவே, பிஎஸ்என்எல் தனியார்மயமாகாது. 4ஜி சேவை தொடங்கினால் பிஎஸ்என்எல் வளர்ச்சி வளமிக்கதாக இருக்கும் என்று அவர் பேசினார்.