சிபிஎம் தென்சென்னை மாவட்ட மாநாட்டில் பேரா.பிரபாத் பட்நாயக்கின் ‘பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை’ எனும் நூலை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சுந்தர் பெற்றுக் கொண்டார்.
கவிஞர் ஆ.சி.விஜிதரணின் ‘மரித்தோர் பாடல்கள் - பாலஸ்தீன் கவிதை தொகுப்பு’ நூலை மூத்தத் தலைவர் மயிலை பாலு வெளியிட, எடிட்டர் க.சரத், கவிஞர் ஐ.சரத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சிபிஎம் தென்சென்னை மாவட்ட மாநாட்டில் மூத்தத் தலைவர் கே.என்.கோபாலகிருஷ்ணனை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கௌரவித்து, சென்னையில் செங்கொடி வித்துக்களும், விழுதுகளும், என்ற நூலை வழங்கினார். கட்சியின் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின் ஆகியோர் உடன் உள்ளனர்.