திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஞாயிறன்று (ஏப்.9) நடைபெற்ற புத்தக திருவிழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்). ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட நூலக அலுவலர் பெ.வள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.