மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி எழுதிய ‘அரசியலும் ஆக்ஸிஜன்தான்’, ‘கொரோனா காலச்சுவடு’, ‘இளமை கூட்டும் அழகுக்கலை மருத்துவ நவீன சிகிச்சைகள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஜூலை 23) திருவான்மியூரில் நடைபெற்றது. நூல்களை திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி வெளியிட்டார். இந்நிகழ்வில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத் தலைவர் க.பீம்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.