districts

img

தோழர் சண்முகவேலு காலமானார்

அம்பத்தூர், மே 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி தொகுதிக் குழுவுக்குட்பட்ட பட்டா பிராம் கிளை முன்னாள் செயலாளர் மூத்த தோழர்   சண்முகவேலு (80) செவ்வா யன்று (மே 21) காலமானார். இவர் ஆவடி படைத் துறை தொழிற்சங்க முன்னாள் தலைவராக செயல்பட்டவர். தான் வசிக்கும் பகுதியில் கட்சியை பலப்படுத்து வதிலும், இளைஞர்களை திரட்டுவதிலும் முக்கிய பங்காற்றியவர். பட்டாபிராம் அண்ணா நகர் 3ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், தொகுதி செயலாளர் அ.ஜான், நிர்வாகிகள் நடராஜன், ராபர்ட் ராஜ், பா.ரகுராமன், கங்கதுரை, வடிவேலு, கோதண்டன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அவரது இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை (மே 22) மாலை 3 மணிக்கு  நடைபெற உள்ளது.