சென்னை, ஜூன் 17-
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் வெ. இறையன்பு வெளி யிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிர்வாக வசதிக்காக மாவட்ட ஆட்சியர்கள், துறைகளின் செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். மாவட்ட ஆட்சியராக அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.