districts

img

மாணவர்களுக்கான கலை பண்பாட்டு போட்டிகள்

ராணிப்பேட்டை, செப். 17- ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் படி பள்ளி மாணவர்களுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 3 மையங்களில் நடை பெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலை முறைகளின் தெரிவிக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், நாடகம் , காட்சிக்கலை, ஓவியம் என்ற தலைப்பு களில் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடை பெற்றது.  இந்த கலை பண்பாட்டு திருவிழாவில் மாணவர்கள் ஓவியம், பாடல், நடனம், களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொம்மை, விலங்கு, சாமி போன்ற உருவங்கள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 315 பேர் கலந்து கொண்டனர்.  இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 20 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இதில் தலைமை ஆசிரியர்களும், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் போட்டிக் கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்தி ருந்தனர்.