districts

img

மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகள்

  1. மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான 98வது வட்டத்திற்குட்பட்ட சாமிதாசபுரம், லாக்மா நகர், குட்டியப்பன் தெரு, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், கே.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்  ஆ. பிரியதர்ஷினி நிவாரணப் பணியில் ஈடுபட்டார்.
  2. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் தேங்கி நிற்கிறது. வேளச்சேரி பகுதி, தரமணி பிள்ளையார் கோவில் தெரு, புத்தர் தெரு, கட்டபொம்மன் தெரு, பட்டுக்கோட்டை அழகிரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் உள்ளது.
  3. சென்னையில் பெய்த மழையால் சூளை தட்டான்குளம் பகுதியில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.
  4. கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.