திருவள்ளூர், ஜூலை 23-
விண்ணப்பித்த அனைவருக்கும் குடி மனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 3 வது மாநாடு செங்குன்றத்தில் மாவட்டத் தலைவர் டி.கே.ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே.போஸ் சங்க கொடியை ஏற்றினார்.மாவட்ட துணைத் தலைவர் செங்கொடிச்செல்வம், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.எஸ். பிரதாப்சந்திரன் வேலை அறிக்கையை முன்மொழிந்தார்.பொருளாளர் வி.சரவணன் வரவு செலவு கணக்கை வாசி த்தார்.ஒன்றிய செயலாளர் கே.குமரேசன் நன்றி கூறினார்.
ஒன்றிய அரசு நூறு நாள் வேலைக்கு முழு தொகையையும் ஒதுக்கீடு செய்யது 200 நாட்கள் வேலை, ரூ.600 கூலி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர் நல வாரி யத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், செங்குன்றம் முதல் ஆவடி வரை பொத்தூர் வழியாக கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவராக டி.கே.ராஜா, செய லாளராக என்.எஸ்.பிரதாப்சந்திரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.