districts

img

அண்ணா பல்கலை. ஆய்வு அறிக்கைப்படி கடலூர் பேருந்து நிலையம்: அமைச்சர் தகவல்

கடலூர், ஏப். 25- அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் ஆய்வறிக்கையின்படி கடலூர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் வளர்ச்சிப்பணிகள் குறித்து, விழுப்புரத்தில் ஏப்.26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலர் சிவ் தாஸ் ஆகியோர் வளர்ச்சிப் பணி கள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  6 பேரூராட்சிகள், 3 ஒன்றியங்களைச் சேர்ந்த 625 கிராம ஊராட்சிகள் பயன் பெறும் வகை யில் ரூ.429 கோடி மதிப்பில் புதுக்கூரப் பேட்டை, பெரியாகுறிச்சி, வடலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்எல்சி சுரங்க கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி, கடலூர் கரையேறவிட்டகுப்பம் எரி வாயு தகன மேடை, வண்டிபாளையம் சுப்பிரமணியர் குளம்,அறிவுசார் மையம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர். பின்னர், கடலூரில் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில், “கடலூரில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஆய்வு செய்து தரும்படி கூறி யுள்ளார். எந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிக்கை தருவார்கள். அந்த அறிக்கை பெற்றவுடன் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் துவங்கும்”என்றார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியன், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.