districts

img

ஆளுநரை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் அவசரச் சட்டம் ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு

திருவனந்தபுரம், நவ.12- கேரளத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கிய அவசரச் சட்டத்தை ஆளுநர்  மாளிகையில் கேரள அரசு ஒப்படைத்தது. புதனன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த அரசாணை, சம்பந்தப் பட்ட துறைகளின் ஆய்வுக்குப் பிறகு ஆளுநரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. சனியன்று புதுதில்லி சென்ற ஆளுநர் 20 ஆம்  தேதி கேரளம் திரும்புகிறார். அதன்பிறகே குடியரசுத் தலை வருக்கு அனுப்புவது போன்ற விஷயங்களுக்கு செல்ல வாய்ப்  புள்ளது என ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது. பதினான்கு பல்கலைக்கழகங்களி லும் கல்வி யாளர்களை வேந்தர்க ளாக நியமிக்க வேண்டும் என்பது அவசரச் சட்டம். இதன் மூலம் இரண்டாம் பினராயி அரசு உயர்  கல்வித்துறை மேம்பாட்டிற்காக மேற் கொண்ட பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், பல்வேறு வகையான வளர்ச்சி தடைகளையும் தவிர்க்க முடியும். அவசரச் சட்டம் தம்மை இலக்காகக் கொண்டுள்ளதால் குடியரசுத் தலை வரின் ஆலோசனை பெற்று கையொப்ப மிடவுள்ளதாக ஆளுநர் முன்னதாக ஊட கங்களுக்கு தெரிவித்திருந்தார். அவ சரச் சட்டத்தை நேரில் பார்க்காமல் ஆளுநர் கூறிய கருத்தும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவசரச் சட்டத்தில் அரசு பின்வாங்கப் போவதாகவும், குடி யரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டால், சட்டசபையில் கொண்டு வர முடியாது என்றும் ஊட கங்களில் வெளியான கருத்துகள் தவறானவை. இந்த அவசரச் சட்டம் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் பரி சீலனையில் உள்ள நிலையில், சட்டப் பேரவையில் மசோதா கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என சட்ட வல்லு நர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.