districts

img

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்பட கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா ஆதமங்கலம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்பட கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கம்  பகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சி.எம்.பிரகாஷ்,  முன்னாள் மாவட்ட செயலாளர் பி.சுந்தர், பகுதி தலைவர் பெரியசாமி, தோழமை அமைப்பு தலைவர்கள் டி.கே.வெங்கடேசன், கே.கே.வெங்கடேசன், புதூர் எல்.சிவா, மாணிக்கம்,  பகுதி நிர்வாகிகள்  தியாகராஜன்,சத்தியராஜ், பசுபதி, சின்ன கவுண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.