districts

img

அகில இந்திய மாநாடு: விழுப்புரத்தில் 143 பேர் வரவேற்புக் குழு அமைப்பு

விழுப்புரம், ஜன.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- வது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல்  2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலா ளர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாராட்டு விழா விழுப்புரத்தில் நடந்து முடிந்த சிபிஎம் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த னர். இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த அனைவருக்கும் மாநாடு வரவேற்பு குழு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்  பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், அனைவருக்கும் கைத்தறிஆடை  அணிவித்து பாராட்டினார்.  இதைத் தொடர்ந்து, மதுரையில் நடை பெறவுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டி ற்காக விழுப்புரம் மாவட்ட வரவேற்பு குழு வின் தலைவராக ஆர்.ராமமூர்த்தி, செயலா ளராக என்.சுப்பிரமணியன், பொருளாளராக பி.குமார் உட்பட 143 பேர் கொண்ட வர வேற்பு குழு அமைக்கப்பட்டது.