districts

சென்னை முக்கிய செய்திகள்

தோல்வியின் விளிம்பில் இருப்பதால் திமுக மீது அதிமுக  புகார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஏப். 6 - திருபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மதுரவாயலிலும் தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆகியோரை சைதாப்பேட்டையிலும் நடைபெற்ற பிரச்சாரங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத வர்களில், எஞ்சியவர்களுக்கு தரப்படும் என்பதில் எந்த விதி மீறலும் இல்லை. தோல்வியின் விளிம்பில் இருப்பதால் விரக்தியில் புகார் கொடுக்கின்றனர். இலவச பேருந்து திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம்,  மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என ஏராளமான திட்டங் களை அரசு செயல்படுத்துகிறது. அரசு வழங்கும் உதவிகளால், அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் பேர் சேர்ந்துள்ள னர். இது 5 லட்சமாக உயரும். திமுக தனது  தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காட்டை நிறைவேற்றி உள்ளது. இதுபோன்று பாஜகவினர் திட்டங்களை சொல்லி வாக்கு  கேட்க தயாரா? தேர்தலை கேலி கூத்தாக்கிய பாஜக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை உறுப்பினராக காலையில் பதவி ஏற்றுக்கொண்டார். மாலை நீலகிரிக்கு  வந்து வாக்களியுங்கள் என்று ஓட்டு கேட்கிறார். சட்டமன்ற உறுப்பினராக உள்ள  ஓ.பன்னீர்செல்வம், எம்.பி., பதவிக்கு போட்டியிடுகிறார். வாக்களிக்கும் மக்களை  அவமதிக்கின்றனர். ஆளுநராக இருந்த  ஒருவர் தென்சென்னையில் போட்டியிடு கிறார். இப்படியாக தேர்தலை கேலி கூத்தாக்கி விட்டனர். இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ரம்ஜானுக்கு  சென்னைக்கு  30 ஆயிரம் ஆடுகள் வருகை

சென்னை, ஏப்.6- ரம்ஜான் பண்டிகை வருகிற 11ஆம் தேதி  கொண்டாடப்படுவதை யொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடு கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையிலும் ஆடு கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடு களே பூர்த்தி செய்கின்றன. அந்த வகையில் மகா ராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வர வழைக்கப்படுகின்றன. தற்போது  சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.