districts

img

கிருஷ்ணகிரி அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 6-

   கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 404 கனஅடி இருந்தது. அணை யின் மொத்த கொள்ளவான 52 அடியில் தற்போது நீர்மட்டம் 50.65 அடிக்கு உள்ளது.  முதலில் அணையில் இருந்து வினாடிக்கு 12 கனஅடி திறக்கப்பட்டது.

    தற்போது அணை யில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை அலு வலர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி அணை யில் தற்போது 50.65 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் 50.50 அடிக்கு  தண்ணீர் இருப்பு வைக்க முடிவு செய்து, விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணை யில் திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து,  கிருஷ்ணகிரி அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு இருக்கும்.

    எனவே, வழக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறிப்பாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்ட ணம், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.