சென்னை, பிப். 9- மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் தற்போதைய பரபரப்பான சூழலில் பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அந்த வகை யில் தினம் தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெட்ரோவில் பயணம் செய் கின்றனர். அதனால் மெட்ரோ பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் ரயில் நிலையங்களுக்கு செல்லவும், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மற்ற போக்குவரத்திற்கு மாறவும் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டு கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வண்ணாரப்பேட்டை, அண்ணா நகர், அரசினர் தோட்டம், சின்னமலை, ஈக்காட்டு தாங்கல், ஆயிரம் விளக்கு, பரங்கிமலை, தேனாம்பேட்டை, ஐகோர்ட், தண்டையார்பேட்டை, மண்ணடி ஆகிய ரயில் நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும். மேலும் கிண்டி, தியாகராஜா கல்லூரி, நந்தனம், நேரு பூங்கா, எழும்பூர், ஏஜிடிஎம்எஸ், நங்கநல்லூர் சாலை ரயில் நிலையங்களில் இரண்டு நகரும் படிக்கட்டு கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர், பூங்கா ரயில் நிலையத்தில் மூன்று படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் நான்கு படிக்கட்டுகளும், திருமங்கலத்தில் 5 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஒரு வருடத்திற்குள் முழுமையாக நிறை வடைந்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் மெட்ரோ ரயில் பயணி களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்த நிலையில் தற்போது மூன்று லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து தெருக்களை இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டு கள் வடிவமைக்கப்படும் என தெரிவித்தனர்.