districts

சென்னை முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் ஏரியை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை ,ஏப்.24- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 27.5 ஏக்கர் இடம் மாநகராட்சி வசமும், 11.5 ஏக்கர் இடம் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு பொழுதுபோக்கு பூங்கா, படகு சவாரி, கண்ணாடி தொங்கு மேம்பாலம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடியதாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த ஏரி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கிடையே, வில்லிவாக்கம் ஏரிப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ள 3 ஏக்கர் நிலத்தை தவிர்த்து, எஞ்சியுள்ள 8.5 ஏக்கர் இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு உள்ள ஏரியுடன், 8.5 ஏக்கர் நிலத்தையும் சீரமைத்து ஏரியுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் நீர்பரப்பு அதிகரிக்கும். இதற்காக ரூ.11 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

உணவு வகைகளுடன் ‘சென்னை விழா'

சென்னை, ஏப்.24- தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னையில் வருகிற 29 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை சென்னை விழா நடக்கிறது. சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை இடம் பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள். ரூ.1.50 கோடி செலவில் பிரமாண்டமாக இந்த சென்னை விழா நடத்தப்படுகிறது. இது தொடர்பாக சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "சென்னை விழா"வில் நடைபெறும் கண்காட்சியில் வங்காளதேசம், பூடான், ஈரான், நேபாளம், னைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப் படுத்துவார்கள். இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை 80 அரங்குகளில் வைத்திருப்பார்கள். தமிழகத்தில் இருந்து 70 ஸ்டால்களும் இடம் பெறுகின்றன. தமிழ்நாட்டில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்களும் இங்கு முன்னிலைப் படுத்தப்படும். சில தயாரிப்புகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது தொடர்பாகவும் கண்காட்சியில் செய்து காட்டப்படுகிறது என்றார்.

மதுபானம் பரிமாறும் சிறப்பு உரிம அனுமதியும் ரத்து: அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.24- தமிழ்நாடு அரசு திங்களன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்க மார்ச் 18 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கை ஏப்.24 அன்று வெளியிட்டுள்ளது.  மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மீது  வேன் மோதல்: ஓட்டுநர் பலி

சென்னை, ஏப்.24- சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மெய்யிரை (39). ஓட்டுநரான இவர், ஞாயிறன்று (ஏப்.23) நள்ளிரவு வேனில் மெட்ரோ ரயில் ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அண்ணா நகர் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ரோகிணி தியேட்டர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த  மெய்யிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் இருந்த மெட்ரோ ரயில் ஊழியர்களான பாலசந்திரன், ரமணா இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்  நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய குழு அமைப்பு

செங்கல்பட்டு, ஏப். 24- செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திட வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்வதில்  முறைகேடு நடப்பதாகவும், 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ60 வரை லஞ்சம் பெறுவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மேலும், மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்  விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  செயல்பாடுகள் மற்றும் புகார்கள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழுவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராகவும், வட்ட அளவிலான குழுவிற்கு வட்டாட்சியர் தலைவராகவும் செயல்படுவார். இந்தக்குழுக்களில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை ஊரக  வளர்ச்சி துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் உறுப்பினர்களாக செயல்படுவர்.       நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, புகார் இருப்பின், மேற்படி குழுக்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார்.

வீடு இல்லாதவர்களுக்கு 35 நவீன தங்குமிடம்

சென்னை,ஏப்.24- சென்னையில் தெருவோரம் தங்கி இருப்பவர்களுக்கு 35 நவீன தங்கு மிடங்களை கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை நகரில் பல்வேறு சாலைகள், தெருக்களில் வீடின்றி மக்கள் தங்கியுள்ள னர். இவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வீடுகளை கட்டித் தராமல் உள்ளது. வீடுகளை ஒதுக்கி னாலும், வாரியம் குறிப்பிடும் தொகையை மக்களால் செலுத்த முடியாமல் உள்ளது. இந்நிலையில், வீடின்றி சாலையோரம் தங்கியிருப்போருக்கு தங்குமிடங்களை கட்டுவதற்கான நடவடிக்கையை மாநக ராட்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, திரு வொற்றியூர், தண்டையார்பேட்டை, ராய புரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, வளசர வாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்ட லங்களில் தங்குமிடங்கள் கட்ட 11 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராய  புரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம் பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் வீடற்றவர்களுக்கு 24 தங்குமிடங்கள் கட்டுவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ககன்தீப் சிங் பேடி உத்தர விட்டுள்ளார். அண்ணாநகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை ஆகிய மண்ட லங்களில் அதிக அளவில் புதிய தங்கு மிடங்கள் கட்டப்படுகிறது. 6 மாதங்களில் இந்த தங்குமிடங்கள் கட்டப்படும், இந்த தங்குமிடங்களில் தங்க வைக்க, ஜார்ஜ் டவுன், கோடம்பாக்கம், கோயம்பேடு, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் வீடற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி குடிநீர் திட்ட பணி: அமைச்சர் 

வேலூர், ஏப்.24- வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள்  குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு கூறியதாவது:- வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 விழுக்காடு முடிந்துள்ளது. 23 பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அந்தபணிகள் முடிக்க தீவிரம்  காட்டப்பட்டுள்ளது.  பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோ மீட்டர் மட்டுமே பணிகள்  முடிக்கப்பட வேண்டி உள்ளது.  அந்த  பணிகளும் முடிக்கப்படும். பொழுது போக்கிற்காக பூங்காக்கள் அமைக்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது.  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ரூ.7  ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திரு வண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ரூ.14 கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள்: ராதாகிருஷ்ணன் ஆய்வு 

கடலூர், ஏப்.24- கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவல கத்தில் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார்.  கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் தானியங்கி பண  பரிவர்த்தனை எந்திரத்தை பார்வை யிட்டார். பின்னர் மகளிர் சுயஉதவி குழு  வினருக்கு கடனுதவிகாசோ லைகளை வழங்கினார். கூட்டுறவு துறையின் செயல் பாடுகள் குறித்து துறை சார்ந்த அலு வலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். 

மின்னல் தாக்கி சேதமடைந்த வீடு: எம்எல்ஏ ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஏப்.24- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்ப வருக்கு சொந்தமான கூரை வீடு முழுவ தும் எரிந்து சாம்பலானது. வீட்டின் உரிமை யாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.  இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம்  4 சவரன் நகை,நிலத்தின் பத்திரம்  மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு 2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது.  இந்த தகவலை அறிந்த சங்கராபுரம் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், சம்பவ  இடத்திற்கு சென்று எரிந்து போன வீட்டை  பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்க ளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்க ளுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித்  தருவதாக உறுதி அளித்தார். 

கீழ்பென்னாத்தூரில் இடி மின்னலுடன் மழை

திருவண்ணாமலை, ஏப்.24- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இடி மின்னல் மற்றும்  பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சாலை ஓரத்தி லிருந்த புளியமரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  பேருந்துகள், லாரிகள், கார்கள் என  அனைத்தும் கீழ்பென்னாத்தூர் புறவழிச் சாலை வழியாக செல்ல போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மரம் சாலை யில் விழுந்ததை அடுத்து நெடுஞ்சாலை  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவல் அறிந்த சாலை பணி யாளர்கள் உடனடியாக விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர்.

முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் கூட்டம்

ராணிப்பேட்டை, ஏப்.24- ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அவரது குடும்பத்தைச் சார்ந்தோர் கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரி விக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

சோளிங்கர், ஏப்.24- ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்குட் பட்ட பாட்டிக்குளம், பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பாட்டு நிதியிலிருந்து. கழிவுநீர் கால்வாய் உயர்த்தி தளம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு கழிவுநீர் கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.  அப்போது தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு பணி செய்ய வேண்டும். பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருத்தணி சாலையில் உள்ள திருவள்ளூர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சி வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் தலைமை யில் நடைபெற்றது. முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

குட்டையில் தவறி விழுந்த மாணவன்: தேடும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி,ஏப்.24- கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள அந்தேரிப்பட்டி ஊராட்சி கொட்டாபள்ளனூர் கிராமத்தில் சுண்ணாம்பு பாறைகளை வெட்டி எடுக் கும் குட்டைகள் உள்ளன.  தற்போது இந்த குட்டை களில் நீர் நிரம்பி உள்ளதால் மீன்களும் நிறைய உள்ளது. அதிலிருந்து தண்ணீரை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதுடன் நிறைய மீன்களும் பிடிக் கின்றனர்.  இந்நிலையில், மாது தீபாவின் மகன் 12 வயது 6 ஆம் வகுப்பு படித்து வந்த  இளவரசன் ஞாயிறன்று மீன் பிடிப்பதற்காக அரு கிலுள்ள நீர் நிரம்பியுள்ள சுண்ணாம்பு குட்டைக்கு சென்றபோது 30 அடி ஆழ முள்ள குட்டை நீருக்குள் தவறி விழுந்தான். அப்பகுதி மக்கள்  ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய இளவரசனை தேடும் பணியில் ஈடுபட்ட னர்.பல மணி நேரம் தேடி யும் இளவரசன் கிடைக் கவில்லை என்பதால் 2 பம்பு செட்டுகள் மூலம் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் பொது மக்களும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய வலு தூக்கும் போட்டியில் புதுவை வீரர்கள்

புதுச்சேரி,ஏப்.24- பெடரேஷன் கப் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி ஏப்ரல் 28 முதல் மே மாதம் 7 வரை  கேரளா மாநிலம் ஆலப்புழா  மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி ஜம்மு-காஷ்மீரில் நடை பெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் வலுதூக்கும் வீரர்கள்  யோகேஷ்வரன், ஆட்டோ ஓட்டுநர்  மது (எ) லிங்கேசன்வேலு , மகேந்தி ரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். தேர்வு செய்யப்பட்ட வீரர்க ளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் ஏற்ப டுத்தி தர வேண்டும் என்று சிஐடியு  புதுச்சேரி  தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மதிவாணன் வலியுறுத் தியுள்ளார்.

காரைக்கால் துறைமுகத்தையும் விழுங்கியது அதானி குழுமம்

புதுச்சேரி,ஏப்.24- விதிகளை மீறி அதானி குழுமம்  காரைக்கால் துறை முகத்தை பினாமி பெயரால் எடுத்துள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர்  செய்தி யாளர்களிடம்  கூறியதாவது:- காரைக்கால் துறை முகத்தை அதானி பினாமி பெயரால் எடுத்துள்ளார்.விதிகளை மீறி அதானி குழுமம் துறைமுகத்தை கைவசப்படுத்தியுள்ளதற்கு ரங்கசாமி மவுனம் காக்கிறார். அதானி குழுமத்துடன் அவருக்கு தொடர்புள்ளதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.   புதுச்சேரியில் ஓய்வூதியத்தி ற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதியோருக்கு இதுவரைக்கும் உதவித் தொகை வழங்கப்படவில்லை. மேலும், சுமார் 35 ஆயிரம் பேருக்கு இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ள. முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை. சிலிண்டருக்கு மானியமாக ரூ. 300 தரும் திட்டம், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 50 ஆயிரம் நிதி, ரொட்டிபால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் என பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.