புதுச்சேரி, பிப். 14- தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு அறிக்கை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (வரைவு) குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தலைவர் பேராசிரியர் மதி வாணன் தலைமையில் புதுவையில் நடைபெற்றது. பேராசிரியர் கிருஷ்ணசாமி பேசு கையில், “ உயர்நிலை கல்விக் கான வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ள ஒன்றிய அரசு, 10 நாட்களில் கருத்துக்களைக் கூறுமாறு தெரிவித்திருப்பது ஜன நாயக செயல்பாட்டை மீறும் செயல்” என்றார். அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தகுதியையும், திறமையையும் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. இந்த வரைவு குறித்து கல்லூரிகளில் விரி வான விவாதம் நடத்த வேண்டும். அதுவரை இதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆராய்ச்சியாளர் பிர்ஜ்வால் சாஸ்திரி, “புதிய கல்விக் கொள்கை யில் பாடத்திட்டம் உருவாக்கத்தில் நெகிழ்வுத் தன்மை இல்லாமல் இருப்பதையும், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டு வதையும்” சுட்டிக் காட்டினார். முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் பேசுகையில்,“இந்த வரைவு அறிக்கையை வெறும் கல்வி சீர்திருத்தம் என்று பார்க்கக் கூடாது. கல்வி என்பதை தில்லி யிலிருந்து இயக்குவதாக மாற்றக் கூடாது. புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கு முன்பே அதை அமல்படுத்தத் தயாராக உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்தது. பாடத் திட்டத்தை திட்டமிடுவதும், அமல்படுத்துவதும் அந்தந்த பல்கலைக்கழகங்களின் உரிமை என்றும், அதில் தலையிடுவது கூடாது என்றும் கூறினார். சமூகம், குடும்பம், தேசம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு படிப்பு உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டார். புதுச்சேரி ஆசிரியர் சங்க பொறுப்பாளர் செங்கதிர், “இந்த வரைவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அரசு கல்லூரிகளை ஒழித்துக் கட்டும் முயற்சி” என்றார். நாம் சோதனை எலிகளாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அனைவரும் இதை எதிர்த்து கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் பிரவீன், “மாணவர்கள் மீது, ஒன்றிய அரசின் வரைவுக் கொள்கை திணிக்கப்படுவதை எதிர்ப்பதாகக் கூறினார். நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு முன் மருத்துவ படிப்புகளில் சேரும் சிபிஎஸ்சி மாணவர்களின் எண்ணிக்கை 0.97 விழுக்காடாக இருந்ததாகவும், நீட் தேர்வு நடத்த ஆரம்பிக்கப்பட்ட பிறகு இது 38.84 விழுக்காடாக உயர்ந்ததாகவும் கூறினார். அதேநேரம் மருத்துவ படிப்பு களில் சேரும் அரசு பள்ளி மாணவர்க ளின் எண்ணிக்கை நீட் தேர்வு நடத்த ஆரம்பிக்கும் முன்பு 98 விழுக்காடாக இருந்ததாகவும், அது நீட் தேர்வு நடத்த ஆரம்பித்த பிறகு 59 விழுக்காடாக குறைந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் உயர் படிப்பு நீட் தேர்வு நடத்த ஆரம்பித்தப் பிறகு வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளதாகக் கூறினார். இந்த பாரபட்சத்தை களையும் வகையில் வரைவு அறிக்கை அமைந்திட உரிய திருத்தத்தினை அனைவரும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.