ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் கொள்கைகளை மக்களிடம் விளக்கும் வாகன பிரச்சார இயக்கம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ. தவராஜ் தலைமையில் வாலாஜாவில் துவங்கி முத்துக்கடை பேருந்து நிலையத்தில் முடித்தனர். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் என். ரமேஷ், என். காசிநாதன், ஆர். மணிகண்டன், ஆட்டோ கே.கே.வி. பாபு, ஆ. ரமேஷ், ஆறுமுகம், எ.எஸ். சங்கர், எஸ்.சாம்பசிவம் (ஏஐடியுசி), எஸ். ஆறுமுகம், சி. கோபிநாத் (ஐஎன்டியுசி),எஸ். விஜயலட்சுமி (எச்எம்எஸ்),என்.என். அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.