விழுப்புரம்,டிச.2- இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு விழுப்புரத்தில் டிச.8, 9 ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா? த.மோகன் தகவல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பு வருமாறு:-மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2020-21-ஆம் ஆண்டுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகள் நல்ல நிலையில் உள்ள, கல்வி பயிலும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆட்சியர் வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளி நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ விண்ணப்பிக்கலாம். அதற்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 8, 9 தேதிகளில் நடைபெறும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.