districts

img

உற்சாக ஆர்ப்பரிப்பும் கொண்டாட்ட துள்ளலுமாக ஒரு கதையாடல் நிகழ்வு

பெயரை அறிவித்த மாத்தி ரத்தில் பாய்ந்து சென்று கதை சொல்லத் தொடங்குகிறான் ஒரு சிறுவன்...கதைக்கான ஓவியங் களும் முக்கியம் என்பதால் கையில் புத்தகமும்... அது மட்டுமா, கதவைத் திறக்கும் ஓசையும் வெவ்வேறு சத்தங்களும் பின்னணி இசையைத் தானே எழுப்பியபடி சொல்லி முடிக் கிறான் கதையை. ஒரு சிறுமி தன்னியல்பாக எழுந்து சென்று வாசித்த கதையை ஒரு பிசிறு இன்றி புத்தகத்தில் வாசிப்பது போன்ற உணர்வில் சொல்லி முடிக்கி றாள். இன்னொரு புறம் நீங்கள் என்ன  கதையும் சொல்லுங்கள், குறுக்கே அதில் கேள்வி எழுப்பிக் கொண்டி ருப்பேன் என்கிறது ஒரு வாண்டு. அதுவும் கதை சொல்ல வந்திருப் பவர் ஒரு எழுத்தாளர் என்றாலும் உனக்காச்சு, எனக்காச்சு என்று களம்  இறங்கும் ஒரு சுவாரசியமான சேட்டையும்!   மதிய உணவுக்குப் பிறகு ஓவிய அமர்வில் ஒரு சத்தமும் இன்றி மொத்தப் பட்டாளமும் பெரிய தாளில் முனைப்போடு வரைந்து தள்ளுவதும், வண்ணங்களை வசப்படுத்தி இழைப்பதுமாக....! விளையாட்டுகள், விடுகதைகளோடு ஒரு செயல்பாட்டாளர் மாலை நேரத் தில் வந்து அமர்ந்ததும் வேடிக்கை யாகத் தங்களுக்கு அடைமொழி சூட்டிக் கொண்டனர் குழந்தைகள், எல்லாம் உணவுப் பொருளும் தின்பண்டங்கள் பெயராகவே...பரோட்டா, ஜிலேபி, பிரியாணி, நூடுல்ஸ், ஷவர்மா....எதைத் தான் விட்டார்கள் சிறார்கள்!   மாலை 5 மணி போல்  புத்தகப் பரிசும், சுவையான கேக்குகளும் (சாக்லேட் கேக் என்று ஒரு குரல் நேயர் விருப்பம் எழுப்ப, அப்படியே பற்றிப் பரவுகிறது எல்லா மூலை யிலிருந்தும் எங்களுக்கு சாக்லேட் கேக் சாக்லேட் கேக் என்று!) கொடுத்து முடித்து நன்றி சொல்லி நிறைவு செய்த பின்னும் களைப்பற்ற ஆட்டமும் கொண்டாட் டமும் பறை இசையோடு வாசல் வரை சென்று புத்தாண்டு வாழ்த்து சொல்லி விடைபெற்ற காட்சி களுமாக அமைந்தது மார்க்சிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டம் ஞாயிறு (டிசம்பர் 29) முழு நாள் கேரள சமாஜத்தில் நடத்திய ஒரு கதை சொல்லட்டுமா எனும் குழந்தைகள் கதையாடல் நிகழ்வு. மல்டி மீடியா கிளை சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்வில், ஒருங்கி ணைப்பாளர் ஜென்னி பாரதி வர வேற்று ஒருங்கமைத்து, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனை அழைக்க, சுவாரசியமான கதையாடலில் அவ ரோடு இணைந்தனர் சிறுவர் சிறுமி யர். படைப்பாளி யெஸ்.பாலபாரதி அடுத்து வந்து அவர்களோடு அமர வும் சூழ்ந்து கொண்டனர் குழந்தை கள். பிற்பகல் ஓவிய நிகழ்வில் ராஜ் நெறிப்படுத்தினார். மதன் திரையிட லில் குறும்பட நிகழ்வு. அதனூடாக அவர்களோடு உரையாடி விடை பெற்றார் திரைக்கலைஞர் - சமூக செயல்பாட்டாளர் ரோகிணி. மாலை நிகழ்வில் துளிர் ஹரீஷின் கலந்துரையாடல். இடையே சாய், ராஜ்குமார் இசைப் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர்.  சிறார்களுக்கான புத்தகப் பரிசாக, எழுத்தாளர் நர்மதா எழுதிய தமது சாந்தநாயகம் ஆணா பெண்ணா எனும் சித்திரக் கதை புத்தக பிரதிகள் வழங்கப் பட்டன. எழுத்தாளர் - மொழிபெயர்ப் பாளர் ஜெ.தீபலட்சுமி தருவித் திருந்த சுவையான கேக்குகள் நிகழ்வின் நிறைவாக அமைய, மாவட்ட செயலாளர் ஜி செல்வா, கதையாடல் நிகழ்வை நிறைவு செய்தார். மல்டி மீடியா கிளை உறுப்பினர்கள் ராம்குமார் உள்ளிட்டு பலரும் களப்பணியற்றி நிகழ்வை சிறப்புறச்செய்தனர். பறை இசைக் கலைஞர்களது உற்சாக முழக்கத்தினோடு புத்தாண்டு வரு கைக்கு குழந்தைகள் உரக்க வாழ்த்து தெரிவித்து விடைபெற்ற னர். - எஸ்.வி.வேணுகோபாலன்