districts

img

அரசியலமைப்பு சட்ட அருங்காட்சியகத்திற்கு வழிகாட்டும் ரோபோ சென்னையில் தயாரிப்பு

சென்னை, நவ.13- ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் அமைந்துள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக  வளாகத்தில் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சட்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது, அருங்காட்சியக பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க  ரோபோ ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. இது தொடர் பான புரிந்துணர்வு ஒப்பந்த த்தில் சென்னை ஐஐடி மற்றும் ஓபி ஜிண்டால் குளோ பல் பல்கலைகழகம் இடையே கையெழுத்தாகி யுள்ளது.   இந்தியாவில் அர சமைப்பு சட்டம் உருவாக்கி ஏற்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதே இந்த முன்னெடுப்பின் நோக்க மாகும்.  மேம்பட்ட தொழில்  நுட்பத்தின் வழியாக அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் நபர்களின் ஈடுபாட்டை மேம்படுத்து வதற்காக இந்த ரோபோ பயன்படும் என்று சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய பல்  கலைகழக துணை  வேந்தரும் பேராசிரியரு மான  சி. ராஜ்குமார்  கூறி னார்.  இந்த அருங்காட்சியகம் மிகவும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்  பட்டுள்ளது. நவம்பர் 26-ம் தேதியன்று இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட வுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்ட ஆர்வமூட்டும் சாதனங்கள், காட்சிப்பொருட்கள் மற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேக்களை இந்த அருங்காட்சியகம் கொண்டி ருக்கும் என்றும் அவர் கூறினார். சென்னையில் இந்த ரோபோவை ராஜ்  குமார்,  சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்பு துறை தலைவர் பேரா. வெங்கடேஷ் பாலசுப்ரமணி யன் ஆகியோர் அறிமுகப் படுத்தினர்.