districts

img

மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்

ஆ ந்திராவை போல மாத உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் படுத்த படுக்கையில் உள்ளவர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலையில் 4 மணி நேரம் வேலை முழு ஊதியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் திங்கட்கிழமை மறியல் நடைபெற்றது.   தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமையிலும்  செங்குன்றம் கூட்டுச் சாலையில் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.புருஷோத்தமன் தலைமை யிலும் பொதட்டூர்பேட்டையில் பகுதி செயலாளர் நந்தகுமார் தலை மையிலும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தாட்சாயணி மறியல் நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் மாற்றுத்திறனாளிகள் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் த.சுரேந்திரன் தலைமையில் மறியல் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர், படப்பை, திருப்பெரும்புதூர் ஆகிய 4 மையங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்  தலைவர் பி.பி.பாலாஜி, மாவட்ட செயலாளர் வி.முனுசாமி, வி.அரிக் கிருஷ்ணன், எ.ராமு ஆகியோர் தலைமை தாங்கினார்.    உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் கோட் டாட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலு வலகம் மற்றும் போளூர் பேருந்து நிலையம், வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட குழுக்கள் சார்பில் வேலூர் தலைமை அஞ்சலகம்,  விழுப் புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, கண்டாச்சி புரம், செஞ்சி , வானூர், திண்டிவனம், மேல்மலையனூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, சூளகிரி, போச்சம்பள்ளி, ஊத்த ங்கரையிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.  இதில் மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றியத் தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த மறியல்  போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.