கடலூர், ஜூன் 3-
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற விடுதலை போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் 133ஆவது பிறந்தநாளில் தேசத்தின் விடுதலைக்காக அவர் நடத்திய போராட் டங்களை நினைவு கூர்வோம்.
அஞ்சலையம்மாளின் தியாகத்தை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த கடலூரில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.
அவர் வாழ்ந்த சுண்ணாம் புக்காரத் தெரு காந்தியடி கள் பூங்காவில் அமைக்கப் பட்ட சிலை இன்னும் திறக்கப்படவில்லை. அந்த சிலையை உடனடியாகத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஞ்சலையம்மாளின் துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத் தையும் போற்றுவோம். அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கடலூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.