ஒன்றிய பாஜக அரசின் நவீன தாராளமய கொள்கையை கண்டித்தும், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏப்.5 அன்று டெல்லியில் 10 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி செவ்வாயன்று (ஜன.31) சென்னையில் மண்டல கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் வடமாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், உதவி பொதுச் செயலாளர் வி.குமார், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர்கள் சி.திருவேட்டை (மத்தியசென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), சு.லெனின்சுந்தர் (வடசென்னை), விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பெ.சண்முகம், துணைத்தலைவர் அ.துளசிநாராயணன், விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், துணைத்தலைவர் அ.து.கோதாண்டம் உள்ளிட்டோர் பேசினர்.