தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர். அம்பிகா தலைமை தாங்கினார். சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள் வே.சங்கர், டி .வெங்கடேசன், எஸ். சண்முகம், வி.எம். வெங்கடேசன், செல்வம், மாரிமுத்து, ரவிச்சந்திரன், தங்கராமன், பச்சையப்பன், சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.