கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 90 ஆவது பிறந்தநாள் விழா வியாழனன்று (செப். 28) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அவருக்கு, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு மற்றும் தமுஎகச சார்பில் சிகரம் ச.செந்தில்நாதன், இரா.தெ.முத்து, நா.வே.அருள், வந்தவாசி ஆரீசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நூல் பரிசளித்தனர்.