திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு சண்முகபுரத்தில் இருந்து விம்கோ ரயில் நிலையம் செல்லும் சாலையில் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் (தெரு) விளக்குகள் அமைக்கும் பணியை மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் வார்டு உதவி பொறியாளர் அன்னலட்சுமி, சண்முகபுரம் நலச் சங்க செயலாளர் சரவணன், முன்னாள் தலைவர் அர்ச்சுனன், டி.எஸ்.கோபால் நகர் தலைவர்கள் மோகனசுந்தரம், செல்லதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.