சிபிஎம் கிளை மாநாடுகள்
சிபிஎம் கிளை மாநாடுகள்
வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதிக் குழுவிற்கு உட்பட்டு நடைபெற்ற கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள் விவரம்
வெங்கடேஸ்வராநகர் கிளை - சி.பிரேம்குமார்
எவரெடி காலனி கிளை - கே.சேது
கொடுங்கையூர் கிளை - ஜீ.சீனிவாசன்
கண்ணதாசன்நகர் 35ஆவது வட்ட கிளை - டி.மகேஷ்வரன்
சின்னாண்டி மடம் கிளை - என்.வெங்கடகிருஷ்ணன்
எருக்கஞ்சேரி கிளை - எம்.வேலன்
முத்தமிழ் நகர் கிளை - ஜே.டேவிட்
எஸ்.ஏ.காலனி ‘பி’ கிளை - டி.சிவானந்தம்
எஸ்.ஏ.காலனி ‘சி’ கிளை - ஏ.சங்கர்
எஸ்.ஏ.காலனி பெண்கள் கிளை - பி.ராமாயி
கருணாநிதி சாலை கிளை - வி.எம்.சுரேஷ்
பாரதி நகர் கிளை - பி.கஜேந்திர மணி
காந்தி நகர் கிளை - என்.சந்தானம்
புது நகர் கிளை - அ.நைனா முகமது
திருவள்ளுவர்நகர் கிளை - ஆர்.மோகன்
சாஸ்திரி நகர் கிளை - என்.ஜபரூல்லா
உதயசூரியன்நகர் ‘ஏ’கிளை - எல்.ரஞ்சித்
உதயசூரியன் நகர் ‘பி’கிளை - வி.பருவராஜ்
உதயசூரியன் நகர் ‘சி’ கிளை - டி.ஞானமணி
தேபர் நகர் கிளை - ஆர்.தளவை ராஜேந்திரன்
ஆர்.ஆர். நகர் கிளை - இ.துரை
கண்ணதாசன்நகர் 37ஆவது வட்ட கிளை -டி.ஆர்.தினேஷ்
ஆர்.ஆர். நகர் பெண்கள் கிளை - எஸ்.அலமேலு
எம்.ஜி.ஆர். நகர் கிளை - எம்.புஷ்பநாதன்
44ஆவது வட்ட ‘ஏ’ கிளை - சி.முத்துக்குமார்
44ஆவது வட்ட ‘பி’ கிளை - எம்.சி.பென்சிலய்யா
44ஆவதுவட்ட பெண்கள் ‘ஏ’கிளை - சி.ஜெயந்தி
44ஆவது வட்ட பெண்கள் ‘பி’கிளை - டி.சிந்து
சுந்தரம் பவர் லைன் கிளை - பி.ரவி
பி. வி. காலனி கிளை - ஜீ.கிருஷ்ணன்
கென்னடி நகர் கிளை - எம்.கோமதி
பள்ளத் தெரு கிளை - ஏ. தமீம்
சஞ்சய் நகர் கிளை - எம்.கிஷோர்
கண்ணதாசன் நகர் பெண்கள் கிளை - பி.பிரசன்னா
மாற்றுத்திறனாளிகள் கிளை - வி.ஜெயந்தி
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை
காஞ்சிபுரம், நவ 2 - காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் பிரகாஷ். இவர் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை வருகிறார். மனைவி ராதா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுள்ளார். பிறகு, வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது 25 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம், 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. போலீசார் விசாரணை இந்த கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்: மினி லாரி கவிழ்ந்து 28 பேர் படுகாயம்
காஞ்சிபுரம், நவ 2 - காஞ்சிபுரம் அடுத்த கூத்திரமேடு பகுதியில் இருந்து, வாலாஜா பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் 28 நபர்கள் காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாமல் ஏரிக்கரை பகுதியில் அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனில் முன்பக்க டயர் வெடித்ததால் வேன் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மணிகண்டன், குட்டியம்மா, சுந்தரவல்லி, தீபா, நவமணி, வெள்ளை காசி உள்ளிட்ட 28 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்த 108 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாலு செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டும் குழியுமாக திருப்போரூர் மயான சாலை: சீரமைக்க கோரிக்கை
திருப்போரூர், நவ.2- செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் ஆகிய 3 கிராமங்களில் 5 மயானங்கள் உள்ளன. இந்த மயா னங்களை பேரூராட்சி நிர்வாகம் பரா மரித்து வருகிறது. திருப்போரூர் நகர பகுதிக்குரிய மயானம் மார்க்கெட் குளத்தின் வழியாக செல்லும் வழியில் உள்ளது. இந்த சாலை திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது என கூறி கோயில் நிர்வாகம் சார்பில் சாலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மயானத்திற்கு செல்லும் பாதை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. 15 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள், பள்ளங்களுடன் காட்சி அளிப்பதால் சடலத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு புதிய சிமென்ட் சாலை குறிப்பிட்ட பகுதி வரை அமைக்கப்பட்டது. ஆனால் பிற பகுதிகள் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருவதாலும் இந்த சாலையை தனியார் அடுக்குமாடி குடி யிருப்பு நிர்வாகம் பயன்படுத்தும் என்ப தாலும் அதிலுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக அனுமதி தர முடியாது என கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக கூறி ஒதுங்கி கொண்டது. இதனால் 15 ஆண்டுகளை கடந்தும் இதுவரை மயா னப்பாதை அமைக்க முடியாத நிலையில் பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலை யில் சடலங்களை தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய மயானப் பாதை அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மாணவனுக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு
சென்னை, நவ. 2- உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஆப் மக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் சைபர் தாக்குதல் நடத்தி பல மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் பொறியியல் படித்து வரும் பிரதாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்ஷனில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் பிரதாபை பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சைபர் தாக்குதலை எச்சரிக்கை செய்வதற்காக மெட்டா நிறுவனம் பாராட்டி ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் பட்டியலில் அவரது பெயரை இணைத்துள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
சென்னை, நவ.2- இருவரும் நேரில் ஆஜராகாத தால் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது. விவாகரத்து கோரிய வழக்கில் தனுஷ், ஐஸ்வர்யா இரு வரும் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ்-ஐஸ்வர்யா திரு மணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடை பெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 2022-ஆம் ஆண்டு இரு வரும் தாங்கள் பிரிந்து விட்ட தாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட னா். இந்த நிலையில், இரு வரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
சென்னை, நவ. 2- தாழம்பூர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஸ்ரீ சுதன் (13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதனின் நண்பர் அதே ப் பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் (12). இவரும் அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் வெள்ளிக்கிழமை மாலை செம்மஞ்சேரி வாழவெட்டி தாங்கல் குளத்துக்கு சென்று, அங்கு குளித்தனர். அப்போது இருவரும் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படு கிறது. இதில் இருவரும் தண்ணீ ரில் மூழ்கி தத்தளித்தனர். தண்ணீ ரில் மூழ்கிய இருவரும், தங்களை காப்பாற்றுமாறு சத்தமிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள், தண்ணீரில் மூழ்கிய இருவரை யும் மீட்டு,கரைக்கு கொண்டு வந்தனர். மூச்சுத் திணறலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் முயன்றனர். ஆனால் 2 மாணவர்களும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மஞ்சேரி காவல் துறையினர் இருவர் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.