அம்பத்தூர், செப். 28- அம்பத்தூர் ஓரகடம் ஏகேஆர் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராம கிருஷ்ணன் (50). இவருக்கு வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த எம்.விஜய் என்பவர் அறிமுகமானார். அப்போது ராமகிருஷ்ணன் தனது சகோதரியின் மகன் விவேக் என்பவருக்கு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதை யடுத்து ராமகிருஷ்ணனுக்கு ஆர்.விஜய் என்பவரை எம்.விஜய் அறிமுகம் செய்து, அவர் ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு ஆர்.விஜய், விவேக்கிற்கு ரயில்வே தொழிற்சங்கத் தலை வர் கவுரவ்குமார் மூலம் பயணச்சீட்டு பரிசோதகர் வேலை வாங்கித் தருவதாக வும், அதற்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ராம கிருஷ்ணன், விஜய் கொடுத்த விண்ணப் பத்தை வாங்கி விவேக் மூலம் பூர்த்தி செய்து, கவுரவ்குமாருக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கவுரவ்குமார் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, ஆர்.விஜய், எம்.விஜய் ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சமும், என்னுடன் வேலை பார்க்கும் வினோத்குமாருக்கு ரூ.4 லட்சமும் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராமகிருஷ்ணன் மேற்கண்ட 3 பேருக்கும் ஜிபே மற்றும் வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ.10 லட்சம் அனுப்பிள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் விவேக்கிற்கு வேலை வாங்கி கொடுக்காமல், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் 3 பேரும் ஏமாற்றி வந்துள்ள னர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருவள்ளூர், பெருமாள்பட்டு கர்ணன் நகரைச் சேர்ந்த எம்.விஜய் (42), அம்பத்தூர் கள்ளிக்குப்பம், பசும்பொன் நகரை சேர்ந்த ஆர்.விஜய் (43), அயனா வரம் திக்காக்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (33) ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக கவுரவ்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.