districts

img

தீண்டாமையை கடைபிடிக்கும் தலைமை ஆசிரியர்: 27 இருளர் இன மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம்

திருவள்ளூர், செப்.18 - பள்ளியில் தீண்டாமையை கடை பிடிக்கும் தலைமை ஆசிரியரால் 27 மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ளது தத்தைமஞ்சி ஊராட்சி. இங்கு 5 ஆசிரியர்களுடன் செயல்படும் அரசினர் நடுநிலைப் பள்ளியில் 84 மாணவர்கள் படித்து வருகின்றனர். உஷா ராணி என்பவர் தலைமை ஆசிரிய ராக உள்ளர். இந்த பள்ளியில் லட்சுமி அம்மன் நகரை சேர்ந்த இருளர் இன மாணவர்கள் 27 பேரும் படித்து வந்தனர். இந்த மாணவர்களை தனியாக அமர வைப்பது, சாதி பெயரை சொல்லி இழிவாக பேசுவது, பள்ளி விழாக்களிலிருந்து ஒதுக்கி வைப்பது என தலைமை ஆசி ரியர் தீண்டாமை உணர்வுடன் செயல் பட்டுள்ளார். சக மாணவர்களுக்கு மத்தியில், இருளர் இன மாணவர்கள் மீது துர்நாற்றம் வீசுகிறது என்று இழிவுபடுத்தியுள்ளார். இந்த தீண்டாமை கொடுமையை தாங்க முடியாத மாணவர்கள், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புகார் தெரிவித்து, பள்ளியை புறக்கணித்த னர். பள்ளியின் தலைமை ஆசி ரியரின் போக்கிற்கு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து பொன்னேரி மாவட்ட கல்வி அலு வலர் விசாரணை நடத்தினார். அதில், தலைமையில் ஆசிரியர் சாதிய பாகுபாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்தார்.  இதனடிப்படையில் தலைமை ஆசிரியர் உஷாராணியை கோரைக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்து மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தலைமை ஆசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், தத்தைமஞ்சி நடுநிலைப் பள்ளியிலேயே மீண்டும் பணியமர்த்த வாய்மொழி உத்தரவு பிறப்பித்தாக கூறப்படுகிறது.  இதனையடுத்து தலைமை ஆசி ரியர் உஷாராணி 2023 ஆகஸ்ட் 16 அன்று பள்ளிக்கு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக.17 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளியை புறக்கணித்துள்ளனர். தலைமை ஆசிரியர் உஷாராணியை பணியிட மாறுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தனர்.  இதற்கிடையில் பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் போது, பாதிக்கப்பட்ட மக்க ளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.  இத னால் பேச்சுவார்த்தை தோல்வி யடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரின் பரிந்துரைபடி, 27 மாணவர்களும் 3 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூர் பள்ளியில் செப். 14 ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இருளர் இன மக்களும், மாணவர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் அரசு நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், வருங்கால தலைவர்கள் உருவாகும் வகுப் பறையில், மாணவர்களை சாதிய பாகுபாட்டுடன் நடத்திய தலைமை ஆசிரியர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். 27 மாணவர்களும் தத்தை மஞ்சி அரசினர் நடுநிலைப் பள்ளி யிலேயே மீண்டும் அச்சமின்றி படிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் குறுக்கீடுகளை அனுமதிக்காமல், சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி உள்ளது. ஆறுதல் இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களை மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் இ. ஜெயவேலு, சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் பி.கதிர்வேலு, விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஜெய்கணேஷ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி வெங்கடேசன், தத்தைமஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.