districts

சென்னை முக்கிய செய்திகள்

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் சென்னையில் 24 பேர் கைது

சென்னை, மார்ச் 27- சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய ஆட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த கிரிக்கெட் ரசிகர்களிடம் சிலர் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  இதையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் சேப்பாக்கம் வாலாஜா சாலை,பெல்ஸ் சாலை,விக்டோரியா ஹாஸ்டல் சாலை, சேப்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட  பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சந்தையில் ஐபிஎல் போட்டி அதிக விலைக்கு விற்றதாக முகப்பேரைச் சேர்ந்த ரூ.ஜேக்கப் பிரேம்குமார் (30), எழும்பூரைச் சேர்ந்த பா.ராம்குமார் (32), முகலிவாக்கத்தைச் சேர்ந்த த.கோபி (38),அ.சபு பெர்னாண்டஸ் (45), புதுக்கோட்டையைச் சேர்ந்த மு.கீர்த்திராஜா (20), திருவல்லிக்கேணியை சேர்ந்த அ.குசால் (21), வேளச்சேரியை சேர்ந்த மோ.ஜெசிந்த் (22), ஆவடியைச் சேர்ந்த சி.அருள் (40) உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களிட மிருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 83  ஐபிஎல் டிக்கெட், 18ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர், 18  வழக்குகள் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்ற னர்.

கார் மோதி தொழிலாளி பலி

சென்னை, மார்ச் 27- சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி கார் மோதி உயிரிழந்தார். திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் களத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் வே.சிவக்குமார் (57). இவர் கொட்டிவாக்கம் கெனால் சாலையில் உள்ள  பாத்திரங்கள் செய்யும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.  சிவக்குமார், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதை யில் கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலையோரம் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த  ஒரு கார், சிவக்குமார் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சிவக்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய பன்நோக்கு மருத்துவமனை சிறுசேரியில் தொடக்கம் 

சென்னை, மார்ச் 27- தென்சென்னையில் பிரபலமான டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, ஓ.எம்.ஆரில் சிறுசேரி அருகே (சிப்காட் எதிரில்) அதன் கிளையை திறந்துள்ளது.  “ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறை மூலம் நோய் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை, மறுவாழ்வு ஆகியவற்றின் மூலம் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை உறுதிப்படுத்தும் என்று மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார். மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி.ஜி. கோவிந்த ராஜன் புதிய கிளை தொடக்க விழாவில் பேசுகையில், ஆரோக்கியமும் பரிவும் நிறைந்த மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோயாளிகளுக்கு வழங்க மருத்துவமனை உறுதியளிக்கிறது” என்றார். இந்த கிளையில்  எம்.ஆர்.ஐ, எக்ஸ்-ரே, யு.எஸ்.ஜி. (USG), இ.சி.ஜி. எக்கோ), கேத்லாப், மருத்துவ ஆய்வுக்கூட  பகுப்பாய்வுகள், மருந்தகச் சேவைகள், பிசியோதெரபி, எண்டோஸ்கோபி மற்றும் ஸ்விஃப்ட் ஆம்புலன்ஸ் உதவி ஆகியவை எந்த நேரமும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  கட்டிடம் இடிந்து விழுந்தது

ராணிப்பேட்டை, மார்ச் 27 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் அகவலம் மோட்டூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலுள்ள இரண்டு பள்ளி கட்டிடங்களில் 1986ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது பயன் பாட்டில் இல்லாத கட்டிடத்தின் முன் பகுதி யில் மங்களூர் ஓடுகளால் வேயப்பட்டி ருந்த தாழ்வார பகுதி புதனன்று (மார்ச். 27) காலை இடிந்து விழுந்துள்ளது.  இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்தவித அசம்பா விதமும் ஏற்படவில்லை. மேலும் இப்பள்ளியில் 32 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இடிக்கப் பட உள்ள பள்ளி கட்டிடத்தில் அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாவண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடிவுற்று நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப் படும் என  மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.

செல்போன் வெடித்து வாலிபர் காயம்

கடலூர்,மார்ச் 27- கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் முதுநகர் அருகே உள்ள வழிசோதனை பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (23). அவர் தனது தாயார் பவளக்கொடி (38) மற்றும் பாட்டி அமுதா (56) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வழி சோதனை பாளையத்திலிருந்து கடலூர் முதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழி சோதனை பாளையம்  அருகே சென்று கொண்டிருந்தபோது, புஷ்பராஜ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் மார்பு மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மேலும் கீழே விழுந்த பவளக்கொடி மற்றும் அமுதா ஆகியோர் காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புஷ்பராஜ் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் செல்போனில் வெப்பம் அதிகரித்து வெடித்ததா? அல்லது செல்போனில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு வெடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை.இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மக்களவைத் தொகுதிக்கு  தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

கடலூர்,மார்ச் 27- கடலூர் மக்களவைத் தொகுதிக்கு பொது பார்வை யாளர் ட்ராப் இம்சென் நியமிக்கப்பட்டுள்ளார்.காவல் பார்வையாளராக மனிஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.  திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக டபாஸ் லோத் நியமிக்கப்பட்டுள்ளார். பண்ருட்டி,கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு செல வின பார்வையாளராக பிரமானந்த் பிரசாத் நியமிக்கப் பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் தேர்தல் செல வின கணக்குகளை கண்காணிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் குறித்த புகார்கள் தொடர்பான பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடலூர் தொகுதி:  30 பேர் வேட்பு மனுத்தாக்கல்

கடலூர், மார்ச் 27- கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட பிரதான கட்சிகள் உட்பட 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  கடந்த திங்கட்கிழமை பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகம், ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்த னர். திங்களன்று திமுக தலைமையிலான கூட்டணி யில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வேட்பு மனு தாக்கல் செய்தார். செவ்வாய்க் கிழமை வரை 15 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நாளான புதன்கிழமை ஒரே நாளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.