கடலூர், ஆக.29- கடலூர் மாவட்ட த்தில் 2025 ஆம் ஆண்டுக் கான வாக்காளர் புகைப் படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை (அக்.29) வெளியிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்ட மன்ற தொகுதிகளிலும் 10 லட்சத்து 57 ஆயிரத்து 45 ஆண்கள், 10 லட்சத்துக்கு 91 ஆயிரத்து 826 பெண்கள், 315 இதரர் என மொத்தம் 21 லட்சத்து 49 ஆயிரத்து 186 வாக்காளர்கள் உள்ளனர். பின்னர் ஆட்சியர் கூறு கையில், 1.1.2025 தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான சிறப்பு முகாம்கள் வரு கிற 16 மற்றும் 17-ம் தேதி களில், 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 6.1.2025 அன்று வெளியிடப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன், திமுக நிர்வாகி வழக்கறிஞர் புகழேந்தி, அருள் ஜோதி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், சிபிஐ கிருஷ்ண மூர்த்தி மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.