கடலூர், மே 17-
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில், காவல் துறையினர் செவ் வாய்க்கிழமை இரவு கள்ளச் சாராயம் விற்பவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம் பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளச்சி (60), உளுந்தம் பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மது பாட்டில், புதுவை சாராயம் ஆகியவற்றை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறை யினர் அவர்களை கைது செய்தனர்.