சென்னை,ஆக,26-
சென்னை போக்கு வரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கள் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டை விட, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதும் உடன் பயணிப்பவர் தலைக்கவசம் அணிவது கணிசமாக அதிகரித் துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, “நம்ம ஹெல்மெட்” விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் கடந்த 19 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, ‘ சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சனிக் கிழமையன்று (ஆக.26) அண்ணா சாலை, ஸ்பென்சர் சந்திப்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் 150 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், உடன் பயணித்தவர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்.