districts

img

வேலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதிமொழி ஏற்பு

வேலூர், டிச.23 - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தியதை கண்டித்தும், உடனடியாக அவரை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் வி.குபேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, விசிக வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் வேலூர் பிலிப், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜி.கோபி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் வினோத்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.