districts

img

சுனாமி நினைவு தினம் வைரவன் குப்பம் கடற்கரையில் அஞ்சலி

திருவள்ளூர், டிச 26- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் இருபதாம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு வைரவன் குப்பம் கடற்கரை பகுதியில் சுனாமியில் உயர்ந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி யில் ஏராளமானோர் உயிரி ழந்தனர். அதனைநினைவு கூறும்   வகையில் ஆண்டுதோறும் சுனாமியில் இறந்தவர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பல்வேறு விதங்களில் இறந்த வர்களின் உறவினர்களும் மீனவ பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர். பழவேற்காடு பகுதி யில் 20ஆம் ஆண்டு சுனாமி தின நினைவு நிகழ்ச்சியில் வைர வன் குப்பம் கடற்கரைப் பகுதியில் இறந்தவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி கடல் அன்னையை வணங்கி மலர்களை தூவி கடலில் பாலை ஊற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வைரவன் குப்பம் கிராம நிர்வாகிகள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் கிராம பொது மக்கள் கலந்து கொண்ட னர்.