சிவகங்கை, டிச.31- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா வடக்கு மாம்பட்டி குரூப்பில் உள்ள சுமார் 300 ஏக்கர் அரசு தரிசு நிலங்கள் 50 ஆண்டு களுக்கு முன்னர் பல்வேறு பினாமிகள் பெயரில் தலா 5 ஏக்கர் வீதம் பட்டா வழங் கப்பட்டு, கிணறுகள் வெட்டி கொடுக்கப்பட்டன.
வழங்கப்பட்ட பட்டாக் களில் சர்வே எண் 109/1, 109/2-ல் உள்ள 10 ஏக்கர் நிலங்களில் வணங்காமுடி பட்டி கிராமத்தைச் சேர்ந்த காட்டு இடையன் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது.
இந்த இடங்களை பின் னர் கிரயம் வாங்கிய சந்திர சேகர், சண்முகவள்ளி ஆகி யோர் மணிமாறன், பாபு என்ப வர்களுக்கு விற்று அவர்கள் அந்த இடத்திலே வசந்தம் வேளாண்மை கல்லூரி என் கிற பெயரில் ஒரு நிறுவ னத்தை நடத்தி வருகின்ற னர்.
இவர்கள் இந்த இடத்தில் இருந்த கண்மாயில் சரி பாதி பகுதி, கலுங்கு, வரத்துக் கால்வாய், கிராம காளி கோவில் ஆகியவற்றை கம்பி வேலி போட்டு அடைத் துள்ளனர். கண்மாய் கரை களை அழித்து, கலுங்கை உடைத்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த இடங் கள் அனைத்தும் எஸ்.மாத் தூர் ஊராட்சியைச் சேர்ந்த வணங்காமுடிபட்டி கிரா மத்தின் அருகில் உள்ளது.
இதனால், கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாம லும், ஆடு, மாடுகள் மேய்க்க முடியாமலும் மிகவும் சிர மத்துக்கு உள்ளாகி வரு கின்றனர்.
எனவே, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும், உட னடியாக கண்மாய், கலுங்கு, கிராம கோவில் ஆக்கிர மிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாவட்டச் செய லாளர் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறு முகம் ஆகியோர் உள் ளிட்டோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆக்கிரமிப்பு களை அப்புறப்படுத்த விவ சாயிகள் சங்கம் உறுதி யாக போராடும், துணை நிற் கும் என கிராம விவசாயி களுக்கு உறுதி அளித்தனர்.
நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் முத்து ராமு, மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டத் தலை வர் வீரபாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் ஆறு முகம், உயர்நீதிமன்ற வழக்க றிஞர் இளையராஜா ஆகி யோர் கலந்து கொண்டனர்.
மாநிலத் தலைவர் சாமி நாதன் கூறுகையில், ‘‘கண் மாய்க்குள் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் ரத்து செய்து கண்மாயை பாதுகாக்க வேண்டும்’’ என மாவட்ட நிர்வாகத்தை கேட் டுக் கொண்டார்.