சிதம்பரம், ஜூன் 6- சிதம்பரம் மக்களவைத்தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு அதிக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையொட்டி சிதம்பரத்தில் கூட்டணி கட்சிகளின் சார்பில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் கஞ்சி தொட்டி பெரியார் சிலை, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தலை வர்களின் சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விசிக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி தலைமை தாங்கினார், சிபிஎம் நகர செய லாளர் ராஜா, சிபிஐ வட்டச்செயலாளர் தமிமுன்அன்சாரி, காங்கிரஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.