districts

img

கொள்ளிடம் கூட்டு குடிநீருக்கு ரூ.127 கோடி

சிதம்பரம், மார்.9- சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதிக மக்களுக்கு  கொள்ளிட த்திலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு ரூ. 127 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நகராட்சியின் முதல் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. சிதம்பரம் நகராட்சியின் முதல் கூட்டம் புதனன்று(மார்ச் 9)  நடை பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த துணைத் தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின், பொறியா ளர் மகாராஜன், மூத்த நகர் மன்ற உறுப்பி னர்கள் ரமேஷ், ஜெம்ஸ் விஜயராக வன், அப்பு சந்திரசேகரன், மக்கீன் சிபிஎம் நகர் மன்ற உறுப்பினர் தஸ்லிமா உள்ளிட்ட அனைத்து நகர் மன்ற உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ரூ. 127 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘சிங்கார சிதம்பரமாக’ மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொ ள்ளவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றினர்.