districts

img

கோவையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர் உயிரிழப்பு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர் ஐந்தாவது மலையில் மயங்கி விழுந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சிவராத்திரியை முன்னிட்டு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர் கடந்த மூன்று நாட்களில் சுமார் 13,000 பேர் வெள்ளியங்கிரி மலை ஏறி உள்ளனர். இந்நிலையில் கோவை வீரபாண்டி லட்சுமி நகரைச் சேர்ந்த ராஜேஷ் மகன் கிரண்(22),  தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளியங்கிரி மலை ஏறினார். அவர் ஐந்தாவது மலையில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதை எடுத்து அங்கிருந்த வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் கிரணை மீட்டு அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதை அடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.