ஆபத்தான சாலையை சீரமைக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல் நாமக்கல், ஆக.23- திருச்செங்கோடு அருகே ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு பிரதான சாலையிலி ருந்து ஆனங்கூர் செல்லும் சாலையில் கல்லூரி வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் திருச்செங்கோட்டிற்கு செல் கிறது. இச்சாலையில் அருகருகே மூன்று இடங்கள் விபத்து ஏற்படும் இடங்களாக உள்ளது. குறிப்பாக, ஆனங்கூர் சாலை யில் உள்ள தனியார் திரையரங்கிற்கு முன்பாக சாக்கடை கால்வாய் செல்கிறது. சாக்கடை முறையாக பராமரிக்க படாமல் மூடப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் ஸ்கேன் சென்டர் எதிரில் உள்ள சாலையிலும், சென்ட்ரல் கேப் உண வகம் அருகில் உள்ள இரு இடங்களிலும், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. எனவே, இச்சாலையில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் இடர் பாடுகளை உடனடியாக சரி செய்து, தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாயை மூடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்செங்கோடு நகரக்கிளை வலியுறுத்தி உள்ளது.